நித்திய பிதாவே, தேவரீருடைய அதிமிக நேச குமாரனாகிய சேசுநாதர் சிலுவையில் நிறைவேற்றி, இப்போது இந்தப் பரிசுத்த பீடத்தில் புதுப்பிக்கும் அவருடைய பலியை, உலகத்தின் எத்திசையிலும் இதுவரை செய்யப்பட்டதும், இனி செய்யப்படப் போவதுமான பூசைப் பலிகளோடும், அடியேன் கல்வாரி மலையின் மேல் எங்கள் வியாகுலத் தாயானவள் கொண்டிருந்த கருத்துகளோடும், பற்றுதல்களோடும் ஒன்றித்து, படைக்கப்பட்ட எல்லாவற்றின் பேரால் தேவரீருக்கு ஒப்புக் கொடுத்து: