புனித சூசையப்பர் ஆலயம்


இடம் : நரசிங்கபுரம், 631402

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : திருவள்ளூர்

பங்குத்தந்தை : அருட்பணி. V. அமல்ராஜ் OMI

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அமலோற்பவ அன்னை ஆலயம், பேரம்பாக்கம்

குடும்பங்கள் : 60
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

புதன் மாலை 06.30 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி.

திருவிழா : மே 01 ஆம் தேதி.

வழித்தடம் : சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம். தண்டலம் கூட்ரோடிலிருந்து அரக்கோணம் சாலையில் பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்.

Location map : https://maps.app.goo.gl/FjZKVXuD7znsXPps8

வரலாறு :

நரசிங்கபுரம் கிராமத்தில் வசித்து வந்த 8 கத்தோலிக்க குடும்பங்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய செல்லம் பட்டிடை பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இன்னையா அவர்கள், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு மேதகு ஆயர் அந்தோணிமுத்து அவர்களின் அனுமதியுடன், நரசிங்கபுரம் பிளேஸ் தோட்டத்தில் ஆலயம் கட்டி 19.04.1966 அன்று பேராயர் மேதகு அருளப்பா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் இவ்வாலயம் செல்லம் பட்டிடை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.